Posts

Showing posts from December, 2016

Gravel supporting Silambarasan

Image
“ஜல்லிக்கட்டு நடத்தும் வரை விடக் கூடாது..!” - சிம்பு ஆவேசம் 2017ஆம் ஆண்டு தமிழர் திருநாளில் ஜல்லிக்கட்டை நடத்தவிட வேண்டும் என்று பலரும் பல விதமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். “ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித்துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த விடாமல் செய்கின்றனர். அரசும், நீதித்துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்னைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் முக்கியகடமை என்று மல்லுக் கட்டுவது ஏன் என்பது எனக்கு  புரியவில்லை. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதி...

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Image
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மாற்று சினிமா வரும். ரசிகர்கள் ஒரே மாதிரியான மசாலா படங்களை பார்த்து எப்போது வித்தியாசமான படங்களை கோலிவுட்டில் கொடுப்பார்கள் என காத்திருக்க, அவர்களுக்காகவே வந்துள்ளது இந்த துருவங்கள் பதினாறு.   கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை, ஒரு விபத்து நடக்கின்றது, இதை கண்டுப்பிடிக்க தீவிர முயற்சியில் இறங்குகிறார் ரகுமான். அதை தொடர்ந்து இந்த கொலைகளை யார் செய்தது, அந்த விபத்து எப்படி நடந்தது, இந்த கொலைக்கும், அந்த விபத்திற்கும் என்ன சம்மந்தம் என அடுத்தடுத்து பல டுவிஸ்டுகளுடன் படம் நகர்கின்றது. படத்தின் கதை இனி சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதற்காக இதோடு நிறுத்தியுள்ளோம். படத்தை பற்றிய அலசல் கிரைம் த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் ஏன், இந்திய சினிமாவிலேயே வருவது அரிது, பெரிதும் ஹாலிவுட், கொரீயன் படங்களில் தான் இதுப்போன்ற புலானய்வு கிரைம் படங்கள் வரும். கொரீயன் பட பாணியில் எந்த ஒரு படத்தின் தழுவலும் இல்லாமல் இருக்கின்றது இந்த துருவங்கள் பதினாறு. மேலும், படத்தில் ரகுமானை தவிர வேறு எந்த முகங்களும் நமக்கு பரிச்சயம் இல்லை, ...

BalleVellaiyathevaa Movie Review

Image
பொதுவாக ஒரு பாராட்டத்துக்குரிய செயலை செய்யும் போது சொல்லும் ஒரு சொல் பலே வெள்ளையத் தேவா. அதையே தலைப்பாக கொண்டு அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் உடன் சசிகுமார் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் பலே வெள்ளையத்தேவா. இந்த படம் நம்மையும் அப்படி சொல்ல வைத்திருக்கின்றது என்று பார்ப்போம். கதைக்களம் Facebook, Whatsup என இப்போது நாம் உபயோகிக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் நிறைந்த ஒரு கிராமத்திற்கு போஸ்ட் மாஸ்டராக வரும் ரோகிணியும் அவருடைய மகனான சசிகுமாரும், selfie காத்தாயி, கணக்காக வரும் கோவை சரளா, சங்கிலி முருகனனின் வீட்டிற்கு புதிதாக குடிவருகிறார்கள். வந்த இடத்தில ஹீரோ சசிகுமாருக்கு கதாநாயகி தான்யா மீது காதல் வர, ஒரு கட்டத்தில் ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வில்லனாக வரும் வலவனுக்கும் சசிகுமாருக்கும் இடையில் ஒரு பிரச்சனை உண்டாகிறது. அதன் பின் அந்த பிரச்சனையால் சசிகுமாருக்கும் கோவை சரளாக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாகிறது. இதற்கிடையில் கதாநாயகியின் அப்பாவாக வரும் பாலசிங்கம் போலீஸை பார்த்தால் உடனே பயந்து ஓடி ஒளிந்து கொண்டு அறிவாளை தூக்கி கொள்கிறார். அவர் ஏன் எதற்காக அப்படி ச...

Kaththi Sandai Review

Image
விஷால், சுராஜ் இருவருமே ஒரு வெற்றிக்காக சில வருடங்களாக போராடி வருகின்றனர். இவர்கள் இருவருமே இணைந்து வைகைப்புயல் என்ற கூடுதல் பலத்துடன் களம் இறங்கியிருக்கும் படம் தான் கத்தி சண்டை. கத்தி சண்டைக்கு வெற்றி கிடைத்ததா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கண்டேய்னர் நிறைய பணம் போலிஸாரால் கைப்பற்றப்படுகின்றது. அந்த பணத்தை தமன்னாவின் அண்ணன் ஜெகபதிபாபு கைப்பற்றி கவர்மெண்டில் ஒப்படைக்கின்றார். இதை தொடர்ந்து விஷால் அப்பாவியாக எண்ட்ரீ ஆகி தமன்னாவிடம் பொய்கள் எல்லாம் சொல்லி காதலிக்க வைக்கின்றார். அதை தொடர்ந்து தமன்னாவின் அண்ணன் விஷாலுக்கு பல டெஸ்ட் வைத்து நீ தான் என் மாப்பிள்ளை என்று கூறுகிறார். பிறகு ஜெகபதிபாபுவை ஒரு கும்பல் கடத்தி பணத்தை கேட்டு மிரட்டுகின்றது. பிறகு தான் தெரிகிறது, ஜெகபதி பாபு ரூ 50 கோடியை மட்டும் அரசாங்கத்திடம் கொடுத்து ரூ 250 கோடியை பதுக்கியுள்ளார் என்று, அந்த பணத்தை தமன்னாவுடன் காதல் நாடகம் செய்து விஷால் கைப்பற்ற, அவர் யார்? எதற்காக பணத்தை எடுத்தார்? என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் விஷால் இதேபோல் தான் பல படங்களில் நடிக்கின்றார். கொஞ்...

VeeraSivaji Tamil Movie Review

Image
விக்ரம் பிரபு இது என்ன மாயம், வாகா போன்ற படங்களால் கொஞ்சம் சறுக்கலில் உள்ளார். இவருக்கு இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் தகராறு படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயக் கூட்டணியில் வீரசிவாஜி படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளார். விக்ரம் பிரபு சறுக்கலில் இருந்து மீண்டாரா? பார்ப்போம். கதைக்களம் விக்ரம் பிரபு கால் டாக்ஸி ட்ரைவராக பாண்டிச்சேரியில் இருக்கிறார். அவர் அனாதையாக இருந்தாலும் சொந்த அக்கா போல் பாத்துக்கொள்கிறார் வினோதினி. வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ரூ 25 லட்சம் தேவைப்படுகின்றது. கால் டாக்ஸி விற்று ரூ 5 லட்சம் ஏற்பாடு செய்கிறார், அந்த நேரத்தில் தான் யோகிபாபு, ரோபோ ஷங்கர் மூலம் ஜான் விஜய் அறிமுகம் கிடைக்கின்றது. அவர் குறைந்த பணத்திற்கு அதிக பணம் தருவதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றி செல்கிறார். அதன் பிறகு அந்த கும்பலை கண்டுப்பிடித்தாரா, குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததா என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் விக்ரம் பிரபு கால் டாக்ஸி ட்ரைவராக வந்தாலும் கலர்புல்லாக தான் இருக்கிறார், ஆக்‌ஷனில் அதிரடி காட்டினாலும் இன்னும் ரொமான்ஸ...

Time for A.R.Rahman’s Oscar again?

Image
'பீலே' படத்தின் 'ஜிங்கா' பாடலின் இசைக்காக, மீண்டும் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 2009-ம் ஆண்டு வெளியான 'ஸ்லம் டாக் மில்லினர்' படத்தின் பின்னணி இசை மற்றும் 'ஜெய் ஹோ' பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவிருக்கும் 89-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 'Pele: Birth of a Legend' படத்தின் இசைக்காக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜேஃப் ஜிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் இணைந்து இயக்கியுள்ளனர். புகழ்பெற்ற பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே வாழ்க்கை வரலாறு தான் இப்படம் என்பது நினைவுக் கூரத்தக்கது. 145 படங்கள் உள்ளடக்கிய நீளமான பட்டியலில், 'பீலே' படத்துக்கான இசையமைப்பும் இடம்பெற்றிருக்கிறது. சிறந்த பாடலுக்கான விருதுப்பட்டியலில், 'பீலே' படத்தின் 'ஜ...

Bharath in Murugathas Film

Image
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பரத்..! தமிழில் ‘கத்தி’, ஹிந்தியில் ‘அகிரா’ படங்களை முடித்து விட்டு மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க, நடிகர் பரத் ஒப்பந்தமாகியுள்ளார். அதனை ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக பரத்தின் படங்கள் ஜொலிக்காத நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Ajith film's song became league

தல அஜித் நடிப்பில் தல-57 பல்கேரியாவில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இப்படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை தற்போது எடுத்து வருகின்றார்களாம். இந்நிலையில் தல-57க்கு அனிருத் தான் இசை என்பது அனைவரும் அறிந்ததே, அனிருத் சமீபத்தில் யோகிபி பாடிய பாடல் ஒன்றை பதிவு செய்தார். இந்த கம்போஸிங்கின் போது ஒரு சில நொடிகள் இசை லீக் ஆகியுள்ளது, இவை படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ... https://twitter.com/ThalaAjith_FC/status/807958223923937280

A massive hit in the remake of the film, Ajith

Image
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்து அடுத்து யாருடன் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் இவர் அடுத்து பாலிவுட்டில் ரூ 100 கோடி வசூல் செய்த டியர் ஜிண்டாகி படத்தின் ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இப்படத்தில் ஷாருக்கான் சில காட்சிகள் தான் வருவார், அவரின் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க வைக்கலாம் என பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது

Chennai28II Movie Review

Image
ஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீண்டும் அந்த ரூட்டிற்கு வருவார்கள் என ஆவல் தோன்றும், அப்படி தான் வந்த ஏரியாவிலேயே மீண்டும் களத்தில் இறங்கி 6 அடிக்க வந்துள்ளார் வெங்கட் பிரபு, 6 அடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் சென்னை-28 படத்தில் நடித்தவர்கள் அனைவரும் 10 வருடம் கழித்து காட்டுவது போல் அவர்கள் வாழ்க்கை தொடங்குகின்றது. படத்தின் ஆரம்பத்திலேயே ஜெய்யின் திருமண நிச்சயத்தார்த்தம் தேனியில் நடைப்பெறுகின்றது. தேனிக்கு அனைத்து நண்பர்களும் குடும்பத்தோடு செல்ல, ஒரு இக்காட்டான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் வைபவ் நடத்தும் கிரிக்கெட் டீமுடன் மோதுகிறார்கள், வைபவ் வெற்றி பெறுவதற்காக ஜெய்யை ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஏற்பாடு செய்து மிரட்டுகிறார். ஜெய்க்காக அந்த பைனல் மேட்சில் தோற்றாலும், போட்டோ எப்படியோ லீக் ஆகி கல்யாணம் நின்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து ஜெய் திருமணம் என்ன ஆனது, மற்ற நண்பர்கள் குடும்பத்தினரிடம் எப்படி மாட்டி முழிக்கிறார்கள், இவர்கள் எல்லோரையும் மீ...

Khaidi No 150 Official Teaser || Mega Star Chiranjeevi || Kajal Aggarwal || V V Vinayak || DSP

Image

Modified release film script Suseenthran

Image
வெளியான  படத்திற்கு திரைக்கதையை மாற்றிய சுசீந்திரன், மாவீரன் கிட்டு படக்குழுவினர்கள் அதிரடி மாவீரன் கிட்டு கடந்த வாரம் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இப்படம் பல இடங்களில் வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இன்று முதல் இப்படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இவை கண்டிப்பாக ஒரு புது முயற்சி தான், இதன் மூலம் படத்திற்கு இன்னும் கூட்டம் வர வாய்ப்புள்ளது.

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

Image
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலுக்கு நேர்ந்த கொடுமை ஜெயலலிதா மறைவு ஒட்டுமொத்த இந்தியாவேயே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் வடிவேலு ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதை தொடர்ந்து அவர் 5 வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை, தற்போது கத்திச்சண்டை படத்தில் நடித்துள்ளார். நேற்று முதல்வருக்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலுவை உள்ளே விடவில்லையாம், இதுக்குறித்து ‘கடைசியாக அந்த தாய் முகத்தை பார்க்கலாம் என்று வந்தேன், ஆனால், கூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை’ என்று சமாளித்து பேசினார்.

Ajith's tender tribute

Image
பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜெயலலிதாவின் மரணம்- அஜித்தின் உருக்கமான அஞ்சலி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் அஜித் விடுத்துள்ள அறிக்கையில், "அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்று நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் அஜித்

Vijay Antony's grandson, who know?

Image
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சைத்தான் படம் செம்ம ஹிட் அடித்துள்ளது. மேலும், விஜய் ஆண்டனிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனி யாருடைய பேரன் என்பதை கத்துக்குட்டி இயக்குனர் சரவணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ..

On PC 'Remo' Important information about Remake

Image
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது.   தமிழகத்தை போலவே 'ரெமோ' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் தெலுங்கு வெற்றி விழா நேற்று நடைபெற்றது.   இந்த வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், பாக்யராஜ் கண்ணன், அனிருத், தில் ராஜூ, பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   இந்த விழாவில் பேசிய பி.சி.ஸ்ரீராம், 'ரெமோ' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், முன்னணி பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.   எனவே 'ரெமோ' படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Nasser shocked by the shock news producers

Image
நடிகர் நாசரின் மகன் லுத்புதீன்பாஷா கதாநாயகனாக நடித்து அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பறந்து செல்ல வா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் . இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது, இதில் பேசிய நாசர் நான் ஒரு தகப்பன் என்ற முறையில் இங்கு பேசவரவில்லை, தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டை கடந்தவன் என்ற முறையில், திரைத்துறை எப்படியெல்லாம் வளர்ந்தது, எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட சினிமா மீது காதல் கொண்டவன் என்ற முறையில் பேசுகிறேன். நான், 4 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் பேசுகிறேன். படம் எடுப்பது சிரமமே இல்லை. பத்தாயிரத்திலும் எடுக்கலாம். பத்து லட்சத்திலும் எடுக்கலாம். பத்து கோடியிலும் எடுக்கலாம். நூறு கோடியிலும் எடுக்கலாம். எல்லா பட அதிபர்களும் படம் தயாரிப்பதை விட, வெளியிடுவதற்குத்தான் கஷ்டப்படுகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில், தாணு போன்ற தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட முன்வருவது, பெரிய விஷயம். இந...

Make a Kaththi in the film remake of the comedy actor Satish!

Image
இளைய தளபதி விஜய் நடித்துள்ள படங்களில் முக்கியமானது கத்தி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014 அக்டோபரில் ரிலீஸ் ஆனது. தற்போது இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதனுடைய போஸ்டர் கடந்த ஆகஸ்ட் 25 இல் சிரஞ்சீவி பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்டது. ஸ்ரேயா சரண், காஜல் அகர்வால், ராய் லட்சுமி ஆகியோர் நடிக்க விநாயக் இயக்குகிறார். தற்போது அந்த ஷூட்டிங்கில் சிரஞ்சீவியுடன் பைரவா படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் சதிஷ் போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Saithan Tamil Movie Review

Image
எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் மீண்டும் சைத்தான் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்த முறையும் ரசிகர்களை கவர்ந்தாரா பார்ப்போம். கதைக்களம் விஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது. மேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது. இதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் பின் என்ன ஆனது, ஜெயலட்சுமி யார் என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் விஜய் ஆண்டனி பாய் வேஷம் போட்டாலும் சரி, ஐயர் வேஷம் கட்டினாலும் சரி அப்படியே பொருந்தி போகிறார். அப்பாவி லுக்கிற்காகவே அளவெடுத்து செய்தவர் போல, தனக்கு அடிக்கடி கேட்கும் குரலை கண்டு அவர் பயப்படும் போது நம்மையும் பயத்தில் ஆழ்த்துகிறார். அருந்ததி நாயர் தான் படத்தின் மிக மு...